News April 19, 2025

தென்காசி: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*

Similar News

News April 20, 2025

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

image

ஆலங்குளம் எஸ்ஐ சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ராசையா மகன்கள் இசக்கிமுத்து(26), கருத்தப்பாண்டி(22) என்பதும், அவர்கள் 2 வாள்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. SI விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அவதூறாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

News April 19, 2025

யார் இந்த சி.பா.ஆதித்தனார்?

image

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.

News April 19, 2025

மீன் பாசி குத்தகைக்கு ஏலம் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடனா மற்றும் குண்டாறு ஆகிய நீர் தேக்கங்களின் மீன் பாசி ஏலம் அறிவிப்பு நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9788293060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!