News October 25, 2024

தென்காசி அருகே ரயிலில் பாய்ந்து டிரைவர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம், மேட்டூர் ரயில்வே நிலையத்திற்கு இடையே கணக்கு நாடார்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அயோத்தி என்பவர் ரயில் முன்பு பாய்ந்து இன்று(அக்.,25) அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீசார், உதவி ஆய்வாளர் மாரித்து தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

தென்காசி: மதுபோதையால் தீ விபத்து.. தொழிலாளி பலி

image

திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர் சில தினங்களுக்கு முன் மது போதையில் வீட்டில் கேஸ் அடுப்பு பற்ற வைக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது வேட்டியில் தீ பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதமாக உயிரிழந்தார்.

News December 13, 2025

தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தென்காசி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633-299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

News December 13, 2025

தென்காசி: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

image

புளியங்குடி வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மைதீன் (36) என்பவர் நேற்று இரவு புளியங்குடி – சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த வேன் டூவீலரில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!