News April 10, 2025
தென்காசி அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News November 7, 2025
குற்றாலம்: டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் காசி மேஜர்புரம் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லத்திலிருந்து சிலுவை முக்கு நோக்கிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கடுமையான வேகத்தில் சென்ற மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலியானார். குற்றாலம் போலீசார் விசாரணை.
News November 7, 2025
தென்காசி: வாலிபருக்கு பாலியல் தொல்லை – 2 பேர் கைது

பிரவீன் (24) என்பவரை, சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான முகம்மது காதி (18) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று இரவு சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளனர். பிரவீனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மோதல் முற்றியுள்ளது. இதில், முகம்மது காதி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை தாக்கி தப்ப முயன்றனர். பொதுமக்கள் முகம்மது காதி மற்றும் கதிர்வேல் (17) ஆகிய இருவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
News November 7, 2025
தென்காசி: சித்திர சபையை தரிசனம் செய்ய தடை

தென்காசி மாவட்டம், இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் நடராச பெருமாள் திருத்தாண்டவம் ஆடியுள்ள பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது. எனவே தற்காலிகமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 04633213298 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.


