News January 22, 2025
தென்காசியில் 24ஆம் தேதி சலூன் கடைகள் முழு அடைப்பு போராட்டம்

தென்காசி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் ரவி, செயலாளர் பண்டாரசிவன்,பொருளாளர் முருகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் வரும் 24ஆம் தேதி முடிதிருத்தம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடி அடைப்பு செய்து போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.
Similar News
News December 18, 2025
தென்காசி வேலை தேடுவோர் நாளை மறக்காதீங்க!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச.19) அன்று காலை 10 மணி முதல் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து இம்முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 18, 2025
தென்காசி: பெண்களுக்கு அரிய வாய்ப்பு

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை இலத்தூர் மெயின் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிச.22ம் தேதி முதல் தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பின்பு மத்திய அரசின் சான்றிதழ்களும் வழங்கப்படுவதால் கிராமப்புற பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE!
News December 18, 2025
தென்காசியில் சிசிடிவி பழுது இலவச பயிற்சி!

செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பழைய எஸ்பி ஆபிஸ் அருகில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் சார்பில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிசம்பர் 22ம் தேதி முதல் 13 நாட்களுக்கு சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 8825794607 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது SHARE IT


