News March 20, 2024
தென்காசியில் தேர்தல் முன்னேற்பாடு பணி

வீ.கே.புதூர் வட்டம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) தென்காசி கோட்டாட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO’s) தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
Similar News
News September 15, 2025
தென்காசி: ஆட்சியரின் போலி கையொப்பம் மூலம் மோசடி!

தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேரிடம் தலா 3 லட்சம் மோசடி செய்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரின் போலி கையொப்பமிட்டு ஆணை வழங்கிய விருதுநகரை சேர்ந்த நாகராஜந்திரகுமார் மற்றும் போலி ஆணை தயாரித்து வழங்கிய ரமேஷ் ஆகிய இருவரை கடையம் போலீசார் கைது செய்துள்ளனர். இது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
News September 15, 2025
சொக்கநாதன்பட்டி வழியாக மினி பஸ் சேவை – துவக்கி வைத்த MLA

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கநாதன்பட்டி கிராமம் வழியாக பூலாங்குளம் வரை செல்லும் மினி பேருந்து வசதியினை இன்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஞ்சாங்கட்டளை பஞ்சாயத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, கிளைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News September 14, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.14) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.