News August 25, 2024
தென்காசியில் கல்வி கடன் முகாம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி கடன் பெற்று பயனடையுமாறு இன்று கேட்டுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தென்காசி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்.. இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: <
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
தென்காசி: அரசு பள்ளியில் 30 லேப்டாப்கள் திருட்டு

கடையநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஒரு அறையில் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் அதிகாரிகள் அந்த அறையை திறந்த போது, அந்த அறையில் இருந்த ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு 30 லேப்டாப்கள் திருடப்பட்டு இருந்தன. இது குறித்து தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
News November 22, 2025
தென்காசியில் இருந்து பிரிந்த 12 ஊராட்சிகள் இதோ…

குருவிக்குளம் யூனியன் பகுதியில் இருந்த இருந்த 12 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியுடன் இணைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேர, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல், லெட்சுமியம்மாள்புரம், ஜமீன் தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைந்துள்ளது.


