News August 25, 2024
தென்காசியில் கல்வி கடன் முகாம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி கடன் பெற்று பயனடையுமாறு இன்று கேட்டுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
செங்கோட்டை விரைவு ரயில்: வழித்தடங்களில் மாற்றம்

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 22, 23, 24, 25 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
News November 20, 2025
தென்காசி: போக்சோ கைதி சிறையில் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிறை குளியல் அறையில் தான் அணிந்திருந்த விலங்கில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 20, 2025
தென்காசி: SIR உதவி எண்கள் வெளியீடு

SIR படிவம் பூர்த்தி செய்வது குறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் – 04633 210074, 04633-1950, தென்காசி சட்டமன்றத் தொகுதி -04633-222212, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி-04633-245666, ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி 04633-270899, 9944096957, சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி 04636223030, வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதி-04636-250223 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம்.


