News August 14, 2024
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News September 19, 2025
சங்கரன்கோவிலில் ராணுவ வீரர் பலி

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அழகாபுரி பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 35). இவர் ராணுவ வீரர். இவர் நேற்று (செப் 18) மானூர் அருகே சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 19, 2025
தென்காசி- குருவாயூர் ரயில் சேவையில் நாளை மாற்றம்

சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக மதுரை – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 16 327) நாளை 20ஆம் தேதி கொல்லம் முதல் குருவாயூர் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. கொல்லத்துடன் இந்த ரயில் நிறுத்தப்படும். திருவனந்தபுரம் கோட்டத்தில் தற்போது நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News September 18, 2025
தென்காசியில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர். இந்த ஆய்வு, திட்டங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாக உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.