News June 27, 2024
தென்காசியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் உள்ளிட்ட முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 23, 2026
தென்காசியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 23, 2026
தென்காசி: கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு.!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் குட்டித்தாய் (58). இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 23, 2026
தென்காசி: விபத்தில் மின்வாரிய பணியாளர் பலி.!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கிராமப்புற பிரிவில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரியும் S.அசோக் குமார் என்பவர் மேக்கரை பகுதியில் டிராக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


