News May 16, 2024
தென்காசிக்கு ரெட் அலர்ட்!

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
தென்காசி: நாய் பொம்மை பரிசளித்த கவுன்சிலர்

இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வந்த நிலையில், பாஜக கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சியில் கோரிக்கை வைத்துள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த தவறிய, 50க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்த பின்பும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகராட்சி சேர்மனை கண்டித்து கவுன்சிலர் ரேவதி பாலீஸ்வரன் நாய் பொம்மை பரிசளித்தார்.
News October 15, 2025
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – குளிக்க தடை

தென்காசி, குற்றாலம் ஆய்க்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.மேற்கு தொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கபட்டது. இதனால் மக்கள் புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
News October 15, 2025
தென்காசி: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <