News January 1, 2025
தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில், பிறந்திருக்கக் கூடிய புதிய ஆண்டில் கடந்த ஆண்டும் பெருமழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவும், இனி இது போன்ற பேரிடர்கள் வராமல் பாதுகாத்திடவும், உலக மக்கள் அனைவரும் அமைதியாக பாதுகாப்பாக வாழவும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – விளக்கம்

டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இது தவறான தகவல் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகேமே விடுமுறை அறிவிக்கும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 28, 2025
BREAKING தூத்துக்குடியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT
News November 28, 2025
தூத்துக்குடியில் இனி 3 வேலை இலவச உணவு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 1702 தூய்மை பணியாளர்களுக்கு 26 இடங்களில் 3 வேலை இலவச உணவு வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


