News August 8, 2025
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, வழங்க உள்ளார். இதில் ஆட்சியர் துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News December 8, 2025
ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ள 17235 பெங்களூரூ – நாகர்கோவில் தினசரி விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


