News August 15, 2024
தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 15, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News October 15, 2025
திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News October 15, 2025
திருவாரூர்: வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டம், தட்டான்கோவில் முள்ளியாறு தலைப்பில் வெள்ளதடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நீரின் அளவு மற்றும் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், காலிசாக்குகள், மணல் மற்றும் சவுக்குகம்புகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.