News December 4, 2024
தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வு

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், எஸ்பி ஶ்ரீனிவாசன் முன்னிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலன்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தூய்மைப்பணியாளர்களின் ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
Similar News
News December 9, 2025
தென்காசி: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி <
News December 9, 2025
தென்காசி: 2 குழந்தைகளுடன் பெண் திடீர் தர்ணா

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், அருகன்குளம் பகுதியை சேர்ந்த கவிதா தனது 2 குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், தென்மலை பஞ்சாயத்து சுப்பிரமணியாபுரத்தில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியிடத்தை தனக்கு வழங்கிட கோரி மனு அளித்துள்ளார்.
News December 9, 2025
தென்காசி: 18 வயது நிரம்பி விட்டதா? உடனே செல்லுங்கள்…

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பமானது இன்று (டிச.9) முதல் தொடங்குகிறது. 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான ஆவணங்கள் : ஆதார் கார்டு, போட்டோ 1, பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ். 18 வயதான அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இணைய அறிவுறுத்தப்படுகின்றனர்.


