News December 4, 2024
தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வு

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், எஸ்பி ஶ்ரீனிவாசன் முன்னிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலன்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தூய்மைப்பணியாளர்களின் ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
Similar News
News November 11, 2025
தென்காசி: முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ரேணுகா என்பவர் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் பொறுப்பேற்று கொண்டார்.
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு – தென்காசியில் வாகன தணிக்கை

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் உள்கோட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீஸாா் விடிய விடிய தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவீர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
News November 11, 2025
தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

தென்காசி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <


