News June 26, 2024
தூத்துக்குடி 37 கடைகளுக்கு சீல்

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் – மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததாக 37 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: சிறுவன் பாலியல் வழக்கு.. சாகும் வரை ஆயுள்!

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை கடந்த 2024-ம் ஆண்டு வேம்பாரை சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தாமஸ் அற்புத ரகசியத்திற்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 22, 2025
தூத்துக்குடி: PF-ல் சந்தேகமா? முகாம் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று பயனடையலாம் என ஆணையர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
தூத்துக்குடியில் மரணம் வரை ஆயுள் தண்டனை

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை கடந்த 2024-ம் ஆண்டு வேம்பாரை சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தாமஸ் அற்புத ரகசியத்திற்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விரித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


