News June 26, 2024

தூத்துக்குடி 37 கடைகளுக்கு சீல்

image

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் – மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ததாக 37 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar News

News November 15, 2025

தூத்துக்குடி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News November 15, 2025

தூத்துக்குடிக்கு ரூ.136 கோடியில் புதிய மருத்துவமனை

image

தூத்துக்குடி மாநகராட்சியில் கூடுதலாக காமராஜ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ.136.35 கோடி மதிப்பில் 7 மாடிகளுடன் 687 படுக்கை வசதி கொண்டதாக இந்த மருத்துவமனை இருக்கும் என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் முடிந்தால் தூத்துக்குடி மக்களுக்கு கூடுதல் மருத்துவமனை கிடைக்கும்.

News November 15, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாசிப்பயிறு, சோளம் போன்ற பயிர்களுக்கு 75 சதவீதமும், நிலக்கடலைக்கு 70%, நெல்லுக்கு 80 சதவீதமும் முளைப்புத்திறன் இருப்பதை உறுதி செய்து விதைகளை விதைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!