News August 15, 2024
தூத்துக்குடி மாவட்ட வேளாண்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடி துவங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆர்கானிக் உரம் என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த உரங்களின் அடங்கிய சத்துக்கள் தெரியாத நிலையில் இதனை விவசாயிகள் வாங்க வேண்டாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 9, 2025
தூத்துக்குடி இளைஞர்களே.. ஊர் காவல் வேலை ரெடி!

தூத்துக்குடி மாவட்ட மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. 20 காலியிடங்கள் உள்ளன. வரும் ஆக. 19ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி – மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி இளைஞர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News August 9, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.62,000 சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ்-ல் தமிழ்நாட்டுக்கு 37 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படும். மேலும் Tier I, Tier II-வாக தேர்வு நடத்தப்படும். <
News August 9, 2025
விநாயகர் சிலை கரைக்க வழிமுறைகள்-கலெக்டர்

தூத்துக்குடி, கலெக்டர் இளம்பகவத் அறிவிப்பின்படி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், தெர்மாகோல் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிலைகளுக்கு உலர்ந்த மலர், வைக்கோல் ஆகியவற்றால் ஆபரணங்கள் தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.