News November 22, 2024
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யின் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,“தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு ஒன்று துவக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
தூத்துக்குடி மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைக்காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடி, மின்னல் நேரங்களில் பழமையான கட்டிடம், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் இருக்காமல் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகள் நீர் நிலைகளை தவிர்க்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் திமுகவினர் தங்கள் பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்
News November 14, 2025
தூத்துக்குடி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
தூத்துக்குடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களமான பட்டினமருதூரில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணியில் தொன்மையான பல்வேறு மண்பாண்ட சிதைவுகள், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கட்டிடங்களின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இயற்கை பிசின்கள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


