News April 27, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

தென் வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிவஞானபுரம் 29.2 மிமீ மழையும், சோழபுரம் 13.6 மிமீ மழையும், காடல்குடி 12.4 மிமீ மழையும் பதிவாகியுள்ளது, என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
கழுகு பார்வையில் திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன. இதோ திருச்செந்தூர் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா கழுகு பார்வை புகைப்படம். *SHARE IT*
News July 6, 2025
திருச்செந்தூர் முருக பக்தர்களே இச்செய்தி உங்களுக்குத்தான்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (ஜூலை 7) காலை 6:15 – 6:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். அதன்பிறகு 8000 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 400 கும்பங்களுடன் பூஜைகள் நடைபெறுகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்படும். 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்.
News July 6, 2025
தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று, காலை 8.30 – 3 மணி வரை St. மரியன்னை கல்லூரியில் நடைபெறு கிறது. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இம்முகாமில் பங்குபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் இந்த <