News April 3, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்க எதிர்பார்ப்பு !

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 22, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
தூத்துக்குடி: இன்று முதல் நீதிமன்றம் புறக்கணிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இ ஃபைலிங் முறையில் முறையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கண்டன போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று 22ம் தேதி முதல் வரும் ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
தூத்துக்குடி:1562 பேர் ஆப்சன்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. மொத்தம் மூன்று தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வில் மொத்தமாக மாவட்டத்தைச் சேர்ந்த 3913 ஆண்கள் 1233 பெண்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த இந்த தேர்வில் மொத்தம் 1562 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


