News August 15, 2024
தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது

தமிழ்நாடு அரசின் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2 ஆம் பரிசு கிடைத்துள்ளது. இதனை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அமைச்சர் நேரு இன்று வழங்கினார். இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
தூத்துக்குடி: இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சுடலைமணி – ராணி தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கான்கிரீட் போடும் பணிக்கு இருவரும் சென்று வந்தனர். அப்போது நாசரேத் பகுதியில் நடைபெற்ற தரைப்பாலம் கட்டும் பணிக்கு சென்றபோது நேற்று மாலை ராணி சிமெண்ட் கலக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
தூத்துக்குடி: நபார்டு வங்கியில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் <
News November 13, 2025
SIR படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR கணக்கெடுப்பில், படிவங்களை விநியோகம் செய்யும் பணி நவ.4 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நவ.11 மாலை 4 மணியளவில் 70% கணக்கெடுப்பு படிவங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் படிவங்களை நிரப்புவதற்காக நவ.15 & 22 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என தூத்துக்குடி தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


