News August 15, 2024
தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது

தமிழ்நாடு அரசின் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2 ஆம் பரிசு கிடைத்துள்ளது. இதனை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அமைச்சர் நேரு இன்று வழங்கினார். இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் மின்தடை?

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ. 25) ஓட்டப்பிடாரம், மணியாச்சி, உடன்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தடை முழு விவரம் அறிய <
News November 24, 2025
தூத்துக்குடி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
தூத்துக்குடி: மாடு முட்டி தொழிலாளி பலி

தூத்துக்குடி கே வி கே நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (43). இவர் ஜாகீர் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கடைக்கு வேனில் இருந்து இவர் மாடுகளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு மாடு இவரது வயிற்றில் முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.


