News September 14, 2024

தூத்துக்குடி: மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள்

image

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (70). இவரது மகன் பிரபாகரன் (35). கடந்த 2017ஆம் ஆண்டு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மகன் பிரபாகரன் தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தை ராஜபாண்டி அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் ராஜபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று (செப்.13) தீர்ப்பு வழங்கியது.

Similar News

News July 11, 2025

தூத்துக்குடியில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 77 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 37 வயதுக்கு உட்பட்டோர் ஆகஸ்ட் 3க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். செப். 3ல் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த <>லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.

News July 11, 2025

தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்.. சீக்கிரம் பதிவு பண்ணுங்க

image

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி St மேரிஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. 200 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் ஜூலை 18க்குள் பெயர், படிப்பு, வாட்ஸ்அப் எண், இ-மெயில், முகவரி உள்ளிட்ட தகவல்களை இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 8 முதல் ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News July 10, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!