News September 14, 2024

தூத்துக்குடி: மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள்

image

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (70). இவரது மகன் பிரபாகரன் (35). கடந்த 2017ஆம் ஆண்டு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மகன் பிரபாகரன் தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தை ராஜபாண்டி அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் ராஜபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று (செப்.13) தீர்ப்பு வழங்கியது.

Similar News

News December 18, 2025

தூத்துக்குடி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

image

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News December 18, 2025

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்கள் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராவை பொருத்துவீர் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பீர் என மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

திருச்செந்தூரில் அதிகரித்த கடல் அரிப்பு.. முக்கிய நடவடிக்கை

image

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளம் விழுந்த பகுதிகளில் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

error: Content is protected !!