News February 16, 2025
தூத்துக்குடி பெற்றோர்களை குறிவைக்கும் சைபர் கும்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நூதன முறையில் சைபர் மோசடி நடைபெறுவதாக தகவல். மர்மநபர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கால் பண்ணி,’உங்கள் மகன்/மகளுக்கு ஸ்காலர்ஸிப் வந்துள்ளது; வங்கியில் மினிமம் ரூ.5000 இருந்தால், ஸ்காலர்சிப் கிடைக்கும்” என கூறுகின்றனர். இதைநம்பி ரூ.5000-ஐ வங்கியில் செலுத்தியவர்களிடம் OTP ஒன்றை அனுப்பி அந்த பணத்தை திருடுகின்றனர்.*உங்களுக்கு கால் வந்தால் 1930-ஐ(சைபர் கிரைம்) அழைக்கவும்
Similar News
News November 13, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
திருச்செந்தூர் நெல்லை பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து

நெல்லை சந்திப்பு ஆறாவது பிளாட்பார்மில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மாலை நான்கு முப்பது மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 11 40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் இன்று முதல் 14, 15, 17, 19, 20, 21, 22, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
தூத்துக்குடி வந்த சட்டமன்ற இணை செயலாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற பொது கணக்கு குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆய்வுக்காக வந்திருந்த தமிழக சட்டமன்ற இணை செயலாளர் ரமேஷ் (57) என்பவர் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


