News August 14, 2024

தூத்துக்குடி பள்ளிகளுக்கு ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011க்கும் முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், வரன்முறை அனுமதி இசைவு பெற 31-1-2025 க்குள் www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரன்முறை அனுமதி இசைவு சான்று பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 14, 2025

தூத்துக்குடி: மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது

image

விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. எனவே ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தனிப்படை போலீசார் நேற்று மதுரையில் வைத்து ஆசிரியரை கைது செய்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News December 14, 2025

தூத்துக்குடி: 46 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.. டிஐஜி உத்தரவு!

image

நெல்லை காவல் சரகம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், முறப்பநாடு, புதூர், ஆழ்வார்திருநகரி, நாலாட்டின் புதூர் ஆகிய பகுதிகளுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 14, 2025

தூத்துக்குடி: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. கலெக்டர் தகவல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு தேடிவரும் ரேஷன் பொருட்கள் திட்டமான தாயுமானவர் திட்டத்தின் கீழ் 43,476 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார். 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஒரு நபர் மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் இதில் பயன் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!