News August 18, 2024

தூத்துக்குடி: படைப்பாளிகளை கெளரவபடுத்திய கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சோ.தருமன், உதயசங்கர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

Similar News

News November 20, 2025

தூத்துக்குடியில் இன்று முதல் ஹால் டிக்கெட்

image

தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் 90 உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனுமதி சீட்டை இன்று முதல் www.drbtut.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

News November 20, 2025

தூத்துக்குடி: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

image

தூத்துக்குடி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 20, 2025

தூத்துக்குடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை?

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்.இவரது 21 வயது மகளான லோகேஸ்வரி என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!