News April 23, 2025
தூத்துக்குடி: செம்மொழி தின பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 18, 2025
தூத்துக்குடி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 7 ஆண்டுகள் சிறை

காயல்பட்டினத்தை சேர்ந்தவர் கெவின். இவர் கடந்த ஆண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் இவரை கைது செய்தனர். தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி கெவினுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News December 18, 2025
தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு… தட்கல் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அறிவிப்பு வெளியானது. அதில், தமிழக மின்பகிர்மான தலைமையகமானது நடப்பு ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 10,000 விவசாய விண்ணப்பம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையில் மின் தேவைக்கேற்ப விவசாயிகள் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுக கூறப்பட்டுள்ளது.


