News August 14, 2024

தூத்துக்குடி காவலர்கள் ரோந்து பணி விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மணியாச்சி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்து பணி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News October 30, 2025

50,000 பேருக்கு வேலை -மாவட்ட ஆட்சியர்

image

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்ததாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலை மூலம் சுமார் 50,000 பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவித்தார்.

News October 30, 2025

தூத்துக்குடி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News October 30, 2025

தூத்துக்குடியில் லாரி மோதி டிரைவர் உடல் நசுங்கி பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தக ரெட்டி பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்ச்செல்வன். இவரது லாரி துறைமுக சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது துறைமுகத்தில் இருந்து வேகமாக வந்த லாரி இவரது லாரியில் மோதியதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!