News March 3, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 4, 2025
தூத்துக்குடி: நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது

தூத்துக்குடியில் கடந்த வாரம் ஒரே நாளில் ரஹமதுல்லா புரத்தைச் சேர்ந்த அமுதா மற்றும் மாதவன் நகர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோரிடம் 18 பவுன் தங்க நகையை 2 பேர் பறித்து சென்றனர். இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் கேரளாவில் பதுங்கி இருந்த தூத்துக்குடி பண்டாரம் பட்டி சேர்ந்த பாரத், அஜித்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.
News December 4, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (டிச.4) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணுங்க.
News December 4, 2025
புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயலாளருடன் சந்திப்பு

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் சுசந்தா குமார் புரோஹித் மற்றும் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று (டிச.3) புதுதில்லியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் சாரங்கியை சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் துறைமுகத்தின் பசுமை மற்றும் நிலையான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


