News March 3, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News January 7, 2026

தூத்துக்குடி: புகார் எண் அறிவித்த ஆட்சியர்

image

பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசு தொகை ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் 957 நியாய விலை கடைகள் மூலம் 541007 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகை நாளை முதல் வழங்கப்படும் நிலையில் இதில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறை 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 7, 2026

தூத்துக்குடி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 7, 2026

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருட்டு

image

தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் மனைவி முத்துலட்சுமி அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு முத்துலட்சுமி வீட்டில் சாவி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை மற்றும் ரூ.4500 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!