News April 3, 2025
தூத்துக்குடி: இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Similar News
News April 10, 2025
பல்லாக்கு கட்டிடம் கனிமொழி எம்.பி. திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் பன்னீர் குளத்தில் உள்ளூர் வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
News April 10, 2025
சாத்தான்குளம் மாணவி தமிழக அளவில் சாதனை

சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிதியா என்பவர் தற்போது வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய Group 1 தேர்வு முடிவில் தமிழகத்தில் 4வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு துணை ஆட்சியர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News April 10, 2025
தனியார் பள்ளி ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் உள்ள ஜி.யு போப் கல்லூரியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்.12 அன்று காலை 9 – 2.30 மணி வரை நடைபெற உள்ளது. 14 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும் இம்முகாமில் பி.எட் அல்லாத, முன் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <