News March 6, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம்  வெளியிட்டுள்ளது.

Similar News

News March 6, 2025

திருச்செந்தூர் இலை விபூதி பற்றி தெரியுமா?

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படுவது பன்னீர் இலை விபூதியாகும். சூரசம்ஹாரம் முடிந்த பின் தேவர்கள் பன்னீர் மரங்களாக மாறினர். முருகப்பெருமானுக்கு 12 கை உள்ளது போல பன்னீர் இலைகளுக்கு 12 நரம்புகள் உள்ளன. திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியை அருந்தி ஆதிசங்கரர் காச நோயை குணமாக்கினார் என கூறப்படுகிறது. திருச்செந்தூர் இலை விபூதி வலிப்பு, குஷ்டம், குடல் புண் நோய்களை தீர்க்கவல்லது. ஷேர்

News March 6, 2025

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

image

தூத்துக்குடி மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக மாவட்ட பதிவாளர்(தணிக்கை) சதாசிவம் உட்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

News March 6, 2025

தூத்துக்குடியில் 392 பேர் +1 தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் நேற்று(மார்ச் 5) +1 பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19,766 இத்தேர்வு எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த தமிழ் தேர்வில் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 384 மாணவர்களே தேர்வு எழுதினர். 392 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!