News January 25, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து காவல் துறை அதிகாரிகள் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (ஜன24) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0461 2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க
News November 13, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
திருச்செந்தூர் நெல்லை பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து

நெல்லை சந்திப்பு ஆறாவது பிளாட்பார்மில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மாலை நான்கு முப்பது மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 11 40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் இன்று முதல் 14, 15, 17, 19, 20, 21, 22, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


