News September 13, 2024
தூத்துக்குடி ஆசிரியர்கள் 2 பேர் பலி

மதுரையில் நேற்று முன்தினம் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்க துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா பேரிலோவன் பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News October 31, 2025
தூத்துக்குடியில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் துறை சார்ந்து புதிய தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரையும், பழைய தொழிலை விரிவுபடுத்த ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு www.agrimark.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப் பத்தை பதிவிறக்கி தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார். SHARE
News October 31, 2025
தூத்துக்குடி: கிராமப்புற வங்கியில் வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <
News October 31, 2025
தூத்துக்குடி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்?

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து நேற்று பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.


