News March 29, 2024

தூத்துக்குடி அருகே 6 பேர் கைது

image

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Similar News

News December 15, 2025

தூத்துக்குடி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

தூத்துக்குடியில் 140 பேர் மீது குண்டாஸ்

image

தூத்துக்குடியில் கடந்த நவ.15 அன்று சிப்காட் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் மேலசண்முகபுரம் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் ரவிகுமார் (53) ஆகிய 2 பேர் கைதாகினர். நேற்று எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவிட்டதன் பெயரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

பாஜக மாவட்ட தலைவர் கண்டனம்

image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது. இதன் பணிகள் 95% முடிவடைந்த நிலையில் தமிழக அரசு திடீரென்று இந்த மருத்துவமனையை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றியுள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு திமுக செய்துள்ள பெரும் துரோகம் என்று பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!