News August 10, 2024
தூத்துக்குடி அருகே மாணவன் மயங்கி விழுந்து பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மகேந்திரன் என்ற மாணவன் சனிக்கிழமை மதியம் இடைவேளையில் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் அவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
கோவில்பட்டியில் கும்பாபிஷேக பணிகள் சுனக்கம்

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிந்து புதிதாக அரங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. மேலும் கோவிலுக்கு என தனி செயல் அலுவலரும் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் இக்கோவிலின் கும்பாபிஷேகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 9, 2025
தூத்துக்குடி : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 9, 2025
தூத்துக்குடி: ரூ.50,000 வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகை முழுவதும் செலுத்திய பின்னும் 3 மாதம் கூடுதலாக தவணைத் தொகை பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முத்துக்குமார் தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு அளித்தார். இதில் நிதி நிறுவனம் முத்துக்குமாருக்கு ரூ.50000 வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


