News August 24, 2024
தூத்துக்குடியில் 350 அதிபயங்கர இடங்கள்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 17, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
தூத்துக்குடி: 8ம் வகுப்பு PASS – ரூ.72,000 வரை சம்பளம்!

தூத்துக்குடி தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8ஆம் வகுப்பு தகுதி போதும்; (ஓட்டுநர்)இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். சம்பளம் ரூ.72,000 வரை. (வயது: 18–37). இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப்பணிகளுக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அனல்மின் நிலையத்தில் முதல் பாய்லர் சுத்தம் செய்ய சென்ற அசாமைச் சேர்ந்த தொழிலாளி முன்னா குர்மி (37) 15 அடிஏணியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பின் மண்டையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


