News August 15, 2024
தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று (ஆக.15) திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பழுதாகி நின்ற ஒரு படகை சோதனை இட்டனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 60 பண்டல்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
தூத்துக்குடி: டூவீலர் விபத்தில் 2 பேர் பலி!

நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகன் அந்தோனி பீட்டர் (23). இவர் டூவீலரில் நாசரேத் இருந்து கேடிசி நகர் சந்திப்பு பகுதியில் அச்சம்பாடு சாலையில் திரும்பியபோது, பின்னால் வந்த பைக் அந்தோனி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த நார்மன் ஜோஸ்வா (18) பாளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
News December 21, 2025
தூத்துக்குடி: இளைஞர் வெட்டிக் கொலை – அரசு நிவாரனம்

சாத்தான்குளம் காந்தி நகரை சேர்ந்த தொழிலாளி சுடலைமுத்து (25) என்பவர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கொலையான சுடலைமுத்து மனைவிக்கு முதற்கட்டமாக ரூ.6 லட்சம் காசோலையை திருச்செந்தூர் ஆர்டிஓ கெளதம் வழங்கினார். அப்போது அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 21, 2025
தூத்துக்குடி: 8.53 மெட்ரிக் டன் நெல் விதை கையிருப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளதாவது -மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் நலன் கருதி, நெல் விதை 8.53 மெட்ரிக் டன் உளுந்து 101.83 மெட்ரிக் டன்னும், கம்பு 16.65 மெட்ரிக் டன்னும், சூரியகாந்தி 7.68 மெட்ரிக் டன்னும், பாசிப்பயிறு 5. 058 மெட்ரிக் டன், சோளம் 3.72 மெட்ரிக் டன், பருத்தி ஒரு மெட்ரிக் டன், இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


