News August 15, 2024

தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

image

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று (ஆக.15) திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பழுதாகி நின்ற ஒரு படகை சோதனை இட்டனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 60 பண்டல்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 10, 2025

தூத்துக்குடி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 10, 2025

தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

image

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்குமார் (27). இவருக்கும் புனிதராஜிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு திசையன்விளை ரோடு பகுதியில் புனித ராஜ் அவரது அண்ணன் நாகராஜ் (28) இருவரும் வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வேல்குமாரை உயிரிழந்தார். இதுகுறித்து குலசை போலீசார் வழக்குபதிவு செய்து புனிதராஜ், நாகராஜை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!