News September 14, 2024

தூத்துக்குடியில் வருவாய் ஆய்வாளர்கள் மாற்றம்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக விருது பெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், முதுநிலை வருவாய் அலகில் உள்ள ஆய்வாளர்கள் 24 பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவர் அஜய் சீனிவாசன் நேற்று(செப்.13) உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 5, 2025

தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News December 5, 2025

தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 5, 2025

தூத்துக்குடி: கொலை குற்றவாளி சமூக சேவை செய்ய உத்தரவு

image

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின், நேற்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.

error: Content is protected !!