News April 16, 2025
தூத்துக்குடியில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும்.அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
Similar News
News July 6, 2025
குடமுழுக்கு 40 எல்இடி, 40,000 அடி பிரம்மாண்ட மேடை

திருச்செந்தூர் கும்பாபிஷேத்தை முன்னிட்டு 40 எல்இடி டிவி மற்றும் 40 ஆயிரம் சதுர அடி பிரம்மாண்ட மேடை கோவில் நிர்வாகத்தால் அமைக்கபட்டு வருகிறது. அந்த பிரம்மாண்ட மேடையில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. மேலும் பலர் இந்த கோவில் கும்பாபிஷேத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 40 எல்.இ.டி டிவி கோவில் சார்பில் வைக்கபட்டுள்ளது .
News July 5, 2025
மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

தூத்துக்குடி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!
News July 5, 2025
வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!