News March 28, 2025
தூத்துக்குடியில் மள்ளர் மீட்பு கழக தலைவர் கைது

கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மது போதையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளச்சி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். *ஓர் அமைப்பு தலைவரின் இச்செயல் பற்றி உங்கள் கருத்து?
Similar News
News September 16, 2025
தூத்துக்குடி: கணவருடன் சென்ற பெண் சாலை விபத்தில் பலி..!

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செட்டிகுறிச்சியைச் சேர்ந்த மேசியார் தாஸ் என்பவர், மனைவி வனிதா மற்றும் குழந்தை சஞ்சனாவுடன் டூவீலரில் சாத்துாரிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சாத்துார் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார், டூவீலரில் மோதியதில் வனிதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
News September 16, 2025
தூத்துக்குடி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 16, 2025
தூத்துக்குடி: குலசை கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தெற்கு பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் கரை ஒதுங்கியதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.