News March 28, 2025

தூத்துக்குடியில் மள்ளர் மீட்பு கழக தலைவர் கைது

image

கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் மள்ளர் மீட்பு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் மது போதையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளச்சி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது மட்டுமின்றி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பெண் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். *ஓர் அமைப்பு தலைவரின் இச்செயல் பற்றி உங்கள் கருத்து?

Similar News

News October 17, 2025

தூத்துக்குடி மக்களே மழை காலத்தில் கரண்ட் இல்லையா?

image

தூத்துக்குடி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் ஆங்காங்கே அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நற்பயிரின் நடு குருத்து வாடி காய்ந்து விடும் எனவும் கூறப்படுகிறது. எனவே இதனை தடுக்க ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ 19.19.19 காம்ப்ளக்ஸ் உரத்தை விதை வழியாக தெளித்து வளர்ச்சியை மேம்படுத்தலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். நம்ம ஊரு விவசாயிகள் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 17, 2025

தூத்துக்குடி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!