News January 22, 2025
தூத்துக்குடியில் மணப்பெண் அலங்கார பயிற்சி

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாளை மணப்பெண் அலங்கார பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் மணப்பெண் அலங்கார பயிற்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கு உரிய மானிய திட்ட விவரங்களை பெறலாம்.18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். மாணவிகளுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும் என சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தூத்துக்குடி: கொலை குற்றவாளி சமூக சேவை செய்ய உத்தரவு

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின், நேற்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.
News December 5, 2025
தூத்துக்குடி: கம்பால் அடித்து கொலை.. 2 பேருக்கு ஆயுள்

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


