News April 2, 2025
தூத்துக்குடியில் தோஷப் பாதிப்புகள் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது சக்கரபாணிபெருமாள் கோயில். கும்பகோணத்தை போன்றே இங்கும் சக்கரபாணி பெருமாளாக அருள்கிறார் எம்பெருமான். இங்குள்ள மூலவர், கல்லில் செதுக்கப்பட்டு ஆழிக்கலவை மற்றும் மூலிகைப் பூச்சுகளால் ஆன திருமேனியராக அருள்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள்ஜன்ம நட்சத்திர நாளில் இங்கு சென்று, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால்,தோஷம் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்.
Similar News
News March 6, 2026
தூத்துக்குடி: சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக உலகத்திலுள்ள கிளை சிறையில் நேற்று (மார்ச்.05) பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான நிரஞ்சன் என்ற கைதி தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். மேலும் சிறைத் துறை அதிகாரிகள் கிளை சிறையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
News March 6, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News March 5, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர்ல் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வு உட்பட 15 அமர்வுகளில் நடைபெற உள்ளது.


