News September 14, 2024
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில், “மிலாடி நபியை முன்னிட்டு 17.09.2024 அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிம தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்; மதுபான விற்பனை கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: தேர்வு இப்போ இல்லை.. கலெக்டர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை., திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய 9 வட்டங்களில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.17-லும், ஜன.2 முதல் நேர்முக தேர்வும் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இலம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE
News November 26, 2025
61 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 61 மனுக்கள் வர பெற்றன. இதனை ஆய்வு செய்த எஸ்பி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News November 26, 2025
தூத்துக்குடி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.


