News April 3, 2025

தூத்துக்குடியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) தூத்துக்குடியில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 18, 2025

சிறந்த கூட்டுறவு பாடலுக்கு ரூ.50,000 பரிசு

image

தூத்துக்குடி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூட்டுறவு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் பாடல் போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவு பற்றி 5 நிமிடம் ஒளிபரப்ப கூடிய பாடலை இசை உடன் அமைத்து வரும் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

காரமும் மணமுமிக்க விளாத்திகுளம் முண்டு வத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி பயிர்களான வத்தல், மக்காச்சோளம், பாசிப்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளைவிக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.

News April 18, 2025

பறவைக்கு தீங்கு விளைவித்தால் ரூ.4 லட்சம் அபராதம்

image

தூத்துக்குடி கடற்கரையோரங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஆண்டுதோறும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. அந்த வகையில் தற்போது பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வருகை தந்துள்ளன. பொதுமக்கள் பறவைகளை பார்த்து ரசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பறவைகளுக்கு ஏதேனும் தொந்தரவு அளித்தால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!