News April 7, 2025
தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 24, 2025
தூத்துக்குடி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

தூத்துக்குடி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..
News December 24, 2025
தூத்துக்குடி: வெட்டிக்கொலை – கல்லூரி மாணவன் கைது!

ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (42) என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து (21) என்ற கல்லூரி மாணவனுக்கு பணம் கடனாக கொடுத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முத்து இசக்கிமுத்துவை நேற்று முன்தினம் இரவு ஓட ஓட வெட்டி கொலை செய்தார். வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் முத்துவை நேற்றிவு கைது செய்தனர்.
News December 24, 2025
எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் இன்று எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி இல்லாதவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


