News April 15, 2024
தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகள் திருப்பாவை (16). வழக்கம் போல் இரவில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருப்பாவை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் திருப்பாவை தாயார் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
கரூர்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
தோகைமலை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை!

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி கூலி தொழிலாளி. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மனவருத்தத்தில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் தற்கொலையா, கொலையா என சந்தேக நிலையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 27, 2025
கரூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


