News April 15, 2024
தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகள் திருப்பாவை (16). வழக்கம் போல் இரவில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருப்பாவை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் திருப்பாவை தாயார் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம்

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 சட்டமன்றத் தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள(4.11.2025) முதல் வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவ-22,23 தேதிகளில் காலை 8 முதல் மாலை 5 வரை SIR கணக்கெடுப்பு படிவம் புதிதாக வழங்கப்படும். தணிக்கையாளர் 2002–2005 பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் சிறப்பாக பரிசீலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
News November 21, 2025
கரூர்: இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெண்ணைமலையில் நடைபெறுகிறது. கல்வித்தகுதி 10ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பு உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். தொடர்புக்கு- 9499055912, 9360557145 அழைக்கலாம்.
News November 21, 2025
கரூரில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!

கரூர் மாவட்டம் குளித்தலை மேற்கு மடவாளர் தெருவைச் சேர்ந்த அமுதா (58) வீட்டு மனை வாங்க விளம்பரத்தில் கூறிய ரவீந்திரன் (38) என்பவரிடம் என்பவரிடம் தொடர்பு கொண்டு ரூ.29 லட்சம் கொடுத்தார். ஆனால் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை. ரவீந்திரன் மற்றும் அவரது மனைவி அமுதாவை கொலை மிரட்டல் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


