News April 1, 2025
தூக்கமின்றி தவித்து வாலிபர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (27)இவருக்கு அடிக்கடி தூக்கத்தில் கெட்ட கனவு வந்துள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊர் மேல் அழகியான் காட்டுப்பகுதியில் தூக்கு போட்டு முயற்சித்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
தென்காசி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

தென்காசி மக்களே TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News November 3, 2025
தென்காசி: நாளை இங்கெல்லாம் மாதாந்திர மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, மற்றும் சாம்பவர் வடகரை துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.04) காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை. பகுதிகள்: தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், புளியரை, வல்லம், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்தடை. SHARE!
News November 3, 2025
தென்காசி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன் தலங்களில் வருகிற நவம்பர் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தென்காசி காசி விசுவநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர், செங்கோட்டை குலசேகரநாதர், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநயினார் உள்ளிட்ட கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


