News April 1, 2025

தூக்கமின்றி தவித்து வாலிபர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (27)இவருக்கு அடிக்கடி தூக்கத்தில் கெட்ட கனவு வந்துள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊர் மேல் அழகியான் காட்டுப்பகுதியில் தூக்கு போட்டு முயற்சித்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

தென்காசி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

image

சங்கரன்கோவில் அருகே திருமலைகொழுந்துபுரத்தில், விவசாயி பரமசிவம் (45) மல்லிகை செடிகளுக்கு மருந்து அடிக்க கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போது தவறி விழுந்து, காலில் கயிறு சிக்கி மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறது. வாய் பேச முடியாத மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 16, 2025

தென்காசி: 10th முடித்தால் மத்திய அரசு பள்ளியில் வேலை உறுதி!

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

தென்காசி மக்களே இந்த இடங்களை NOTE பண்ணுங்க

image

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) முகாம் இன்றும் (நவ. 16) நடைபெறுகிறது. இலஞ்சி தேவர் சமுதாய நலக்கூடம், மேலகரம் டவுன் பஞ்சாயத்து நலக்கூடம், தென்காசி எம்.கே.வி.கே. கல்யாண மண்டபம், தென்காசி முப்புடாதி அம்மன் கோவில் திருமண மண்டபம், பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடம், கீழசுரண்டை ஸ்ரீ குறிஞ்சி மஹால் உள்ளிட்ட இடங்களில் SIR முகாம்கள் இன்று நடைபெறும். SHARE

error: Content is protected !!