News May 16, 2024

துறையூர்: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

image

துறையூர் ஓங்கார குடில், அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவன ஸ்தாபகர் ரெங்கராஜன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சார்பில் நேற்று(மே 15) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்தாபகர் ரெங்கராஜன் தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 3, 2025

திருச்சி: கார் மோதி பெண் துடிதுடித்து பலி

image

நவல்பட்டை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கோகிலா(49) நேற்று இரவு, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் கோகிலா தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 3, 2025

திருச்சி: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

திருச்சி அருகே இருவருக்கு கத்தி குத்து!

image

சமயபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (26), ராஜேஷ் (22), புகழேந்தி (37) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அரவிந்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை புகழேந்தி வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!