News May 16, 2024

துறையூர்: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

image

துறையூர் ஓங்கார குடில், அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவன ஸ்தாபகர் ரெங்கராஜன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சார்பில் நேற்று(மே 15) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்தாபகர் ரெங்கராஜன் தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 9, 2025

திருச்சி: டூவீலர் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

image

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் அருகே நேற்று (டிச.8) கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் வராததால், விபத்து ஏற்படுத்திய அதே காரில் அவர்களை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News December 9, 2025

நவல்பட்டு: விமான நிலையத்தில் விலங்குகள் பறிமுதல்

image

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று (டிச.8) திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் 32 அல்பினோ சிகப்பு காது ஆமைகள், 3 அல்பினோ ரக்கூன்ஸ், 13 கிரீன் இகுவானா ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 9, 2025

திருச்சி: கார் மோதி துடிதுடித்து பலி

image

வையம்பட்டி அடுத்த காந்திநகர் அருகே நேற்று இரவு சபரிமலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நடந்த சென்ற பாலசுப்பிரமணி என்பவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வையம்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!