News April 3, 2025

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை ஆடியோ

image

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லோகநாதன், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News December 12, 2025

வேலூர்: ஓட்டுநருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!

image

வேலூர், காட்பாடி திருப்பாக்குட்டை பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33). இவர் வேலூர் பழைய பஸ்நிலையம், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுபவர்கள் 4 பேருக்கும் சரண்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது. இதனால் சரண்ராஜை பின்தொடர்ந்து மேல்மொணவூர் பைபாஸ் சாலையில் வழிமறைத்து மிரட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். அதன் பெயரில் விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

News December 12, 2025

வேலூர்: சிறுமி வன்கொடுமை.. முதியவர் செய்த செயல்!

image

வேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற போது கடையின் உரிமையாளரான 60 வயது முதியவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 12, 2025

வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

image

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!