News April 3, 2025

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை ஆடியோ

image

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லோகநாதன், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News December 13, 2025

வேலூர்: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்தத்துக்கான சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை திருத்திக்கொள்ள 13.12.25 சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வேலூர் தாலுகாவில் கீழ்அரசம்பட்டு, அணைக்கட்டு–முகமதுபுரம், காட்பாடி–கிளிதான்பட்டரை, குடியாத்தத்தில் மேற்கு எஸ்.மோட்டூர், கே.வி.குப்பத்தில் காவனூர், பேர்ணாம்பட்டில் சொக்கரிஷிகுப்பம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும்.

News December 13, 2025

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

வேலூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!