News April 3, 2025
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை ஆடியோ

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லோகநாதன், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News December 23, 2025
JUST IN: வேலூரில் 291 போலீசார் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.எஸ்.ஐ) மற்றும் காவலர்கள் உட்பட மொத்தம் 291 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக செயல்திறன் மற்றும் காவல் பணிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
JUST IN: வேலூரில் 291 போலீசார் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.எஸ்.ஐ) மற்றும் காவலர்கள் உட்பட மொத்தம் 291 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக செயல்திறன் மற்றும் காவல் பணிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
வேலூரில் மின்தடை – இதுல உங்க ஏரியா இருக்கா?

வேலூர் மாவட்டத்தில் இன்று (23.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வேலூர், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோனாவட்டம், போகை, சேதுவளை, காந்தி சாலை, அதிகாரிகள் லைன், பழைய நகரம், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், கஸ்பா, வேலூர் பஜார், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


