News March 27, 2025

துணிச்சலாக பணியாற்றிய காவலருக்கு பாராட்டு 

image

வேட்டவலம் அடுத்த ஆவூரில் நேற்று நள்ளிரவு அடகுகடையில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற போது போலீசார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டும் திருட்டை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய அவருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். நாமும் இவரை பாராட்டுவோமே. ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 14, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News April 14, 2025

திருவண்ணாமலை இன்றைய வெயில் நிலவரம்

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், 100.4 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 13, 2025

காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

error: Content is protected !!