News March 29, 2025

துக்க வீட்டிற்கு சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி

image

சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (62) அதே ஊரில் வசித்த அவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். துக்க வீட்டிற்கு சென்று அவர் நேற்று (மார்ச்.28) அங்குள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை அவரது உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

நெல்லையில் EB கட்டணம் அதிகமா வருதா? இத பண்ணுங்க

image

திருநெல்வேலி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO <<>>என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 12, 2025

சுப்பிரமணியபுரத்தில் திமுக பிரச்சாரம்

image

அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வார்டு கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு திமுக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலர் ஆவுடையப்பன் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து திமுக அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினார்.

News December 12, 2025

நெல்லை: ரேஷன் கார்டு இருக்கா.? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று புதிய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, கடைகளின் செயல்பாடுகள், தரம் குறித்த புகார் போன்ற மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். தெரியாதவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!