News March 29, 2025

துக்க வீட்டிற்கு சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி

image

சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (62) அதே ஊரில் வசித்த அவரது உறவினர் ஒருவர் இறந்து விட்டார். துக்க வீட்டிற்கு சென்று அவர் நேற்று (மார்ச்.28) அங்குள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை அவரது உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்..!

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 7, 2025

நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

image

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 7, 2025

நெல்லை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

நெல்லை மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <>க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!