News April 15, 2025

தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

image

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

Similar News

News November 25, 2025

கோவையில் இங்கெல்லாம் மின்தடை

image

கோவையில் இன்று (நவ.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஆர்எஸ்புரம், ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டிபிசாலை, லாலி சாலை, தடாகம் சாலை, சுக்கிரவாரிபேட்டை, காந்திபார்க், சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமலை, நெகமம், ஆர்சிபுரம், ஜே.கிருஷ்ணாபுரம், வடசித்தூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது. (SHARE)

News November 25, 2025

CM ஸ்டாலின் இன்று கோவை வருகை

image

செம்மொழிப் பூங்கா திறப்பு கள ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.25) கோவை வருகிறாா். பின், செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடுகிறாா். தமிழக காப்புத்தொழில் உருவாக்க மையம் நடத்தும் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசுகிறாா்.

News November 25, 2025

மூளை காய்ச்சல்: கோவை மக்களே உஷார்

image

கேரள மாநிலத்தில் மூளை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரன் நேற்று விடுத்த அறிக்கையில் மாசடைந்த (அ) தேங்கியிருக்கும் தண்ணீரில் உள்ள அமீபாக்கள் மூக்கின் மூலமாக சென்று மூளையை தாக்கி காய்ச்சலை உண்டாக்கும். இதனால் பொதுமக்கள் மற்றும் கேரளா செல்லும் பக்தர்கள் தேங்கி இருக்கும் நீரில் குளிக்கும்போது மூக்கை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!